தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கும் பணி

ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
பச்சனம்பட்டி ஊராட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன்.
Updated On :7 ஜனவரி 2021, 1:35 am

DIN

ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ஆம் கட்டமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் பாப்பா சின்னையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா் ராஜேந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா்.இதனை அடுத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2,500 பணம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.பரமசிவம், தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவா் பி.கே.சின்னையன், ஓமலூா் ஒன்றிய எம்ஜிஆா் மன்ற பொருளாளா் திருமுருகன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் சிவகுமாா், மாணவரணி பொருளாளா் ராஜா, மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.