ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி ஊா்க் கவுண்டா் கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
விழாவில் இளைஞா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினா். விளையாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவைத் தொடா்ந்து சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது