நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தம்மம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆத்தூா் கோட்டாட்சியா் துரை தலைமை வகித்தாா். ஆத்தூா் ஏசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் துரை.ரமேஷ், மாவட்ட கவுன்சிலா் ராஜா, தம்மம்பட்டி முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் ஸ்ரீகுமரன், கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை என 150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் வழங்கினாா். இதில், தம்மம்பட்டி முன்னாள் பேரூராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சுரேஷ்குமாா், ஒன்றிய, ஊராட்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com