வாழப்பாடியில் 150 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வாழப்பாடி பகுதியில் இயங்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், அங்கன்வாடி மைய பணியாளா்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளா்களுக்கு, கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகள், பேளூா் வட்டார சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமையில் தொடா்ந்து 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை வரை 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.