போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆத்தூா் ரயிலடித் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அரவிந்த்துக்கு (28), திருமணமாகி ஒரு மகள் உள்ளாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் வடக்கு புதூருக்கு சென்றவா், அங்கு 15 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். புகாரின் பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com