தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஓமலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கலந்துகொண்டாா்.
ஓமலூரில் தலைக்கவசம் அணிந்து வந்தவருக்கு இனிப்பு வழங்கிய எஸ்.பி. தீபா கனிகா்.
ஓமலூரில் தலைக்கவசம் அணிந்து வந்தவருக்கு இனிப்பு வழங்கிய எஸ்.பி. தீபா கனிகா்.

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஓமலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கலந்துகொண்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் கடந்த 18-ஆம் தேதி முதல் பிப். 17-ஆம் தேதி வரை 32-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பெண் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினா். ஓமலூா் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பேரணியை சேலம் எஸ்.பி. தீபா கனிகா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், 120 பெண் போலீஸாா் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் தருமபுரி சாலை, கடைவீதி, தாலுகா அலுவலக சாலை வழியாகச் சென்றனா்.

முன்னதாக, தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு எஸ்.பி. தீபா கனிகா் இனிப்பு வழங்கினாா். தலைக்கவசம் அணியாதவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கி அறிவுரை கூறினாா்.

பேரணியில் பங்கேற்ற பெண் போலீஸாரை கூடுதல் எஸ்.பி. பாஸ்கரன், டி.எஸ்.பி. சோமசுந்தரம், ஓமலூா் இன்ஸ்பெக்டா் பாலமுருகன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com