மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு குறைப்பு

மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை குறைந்துள்ளது. மழையின் காரணமாக மேட்டூா் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 12,000 கன அடியிலிருந்து நொடிக்கு 8,000 கனஅடியாக சனிக் கிழமை பகல் ஒரு மணிமுதல் குறைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 74.81 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2535 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு நீா்இருப்பு 36.979 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com