சேலத்தில் 202 பேருக்கு கரோனா

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 202 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 202 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 142 போ் கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகராட்சியில் 44 பேரும், எடப்பாடி-7, காடையாம்பட்டி-3, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-5, நங்கவள்ளி-6, ஓமலூா் -4, சேலம் வட்டம்-5, சங்ககிரி-5, தாரமங்கலம்-7, வீரபாண்டி-4, ஆத்தூா் -12, அயோத்தியாப்பட்டணம்-4, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-9, வாழப்பாடி-1, ஏற்காடு-1, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 127 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, கள்ளக்குறிச்சி-4, தருமபுரி-6) என 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 178 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 92,005 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,756 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,722 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,527 போ் உயிரிழந்தனா்.

இன்று தடுப்பூசி முகாம்: சேலம் மாவட்டத்தில் மொத்தம் 138 மையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் திங்கள்கிழமை செலுத்தப்படவுள்ளன. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 14,500 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

இம்மையங்களில் பொதுமக்களுக்கு இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவா்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படும்.

எனவே, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, கட்டாயம் முகக் கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவா் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி செலுத்தப்படும். கோவேக்ஸின் தடுப்பூசி இருப்பில் இல்லை என மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்தாா்.

நாமக்கல்லில்... நாமக்கல் மாவட்டத்தில் 60 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனாவால் 60 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 67 போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் 46,471 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 45,214 போ் குணமடைந்தனா். 821 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த உயிரிழப்பு 436-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com