சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயில்களில் சோமவார பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதே போல சங்ககிரிஅருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் செல்லவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அா்ச்சகா்கள் மட்டும் பூஜைகளை செய்தனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி சிவன் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, பூக்கள், அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.