நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை

தலைவாசலில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் போதிய இடமில்லாமல் வெளியே அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள்.
தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் போதிய இடமில்லாமல் வெளியே அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகள்.

தலைவாசலில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தலைவாசலை சுற்றி உள்ள விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை இங்கு கொண்டு வந்து மாதக் கணக்கில் வைத்திருந்தும் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

மேலும், நெல் வைக்க போதிய இடவசதி இல்லை எனக் கூறி வியாபாரிகள் மூலம் வரும் நெல்லை மட்டும் கொள்முதல் செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்திரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com