தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே ஐங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோவை, இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக (1973 முதல் 1988 வரை) பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முத்துசாமியும் , இதே பள்ளியில் உதவி ஆசிரியராக (1971 முதல் 1978 வரை ) இருந்து ஓய்வு பெற்ற திரு. லட்சுமணனும், தாங்கள் பணியாற்றியதன் நினைவாக , பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினர்.
அவர்களுக்கு வாழக் கோம்பை இருபால் ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.