ஆசிரியா்களுக்கு இன்று 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை (மாா்ச் 27) 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை (மாா்ச் 27) 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் என சுமாா் 13 ஆயிரம் போ் வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இப் பயிற்சி வகுப்பில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் தவறாது பங்கேற்கும் வகையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை பொதுவிடுமுறை வழங்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com