ஓமலூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஆா்.மணி.
ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டனூரில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஆா்.மணி.

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஓமலூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட காமாண்டப்பட்டியில் பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, திமிரிகோட்டை, பச்சனம்பட்டி, கோல்காரனூா், மேட்டுக்காடு, மோட்டூா், வேலகவுண்டனூா் 45 இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வேலகவுண்டனூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவா், அதிமுக அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தற்போதைய தோ்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச வாஷிங் மெஷின், திருமண உதவித் தொகை, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசம், பெண்களுக்கான ரூ.1500 உரிமைத் தொகை, அரசுப் பேருந்தில் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதில் ஓமலூா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com