சிவாயலங்களில் பிரதோஷம்

தம்மம்பட்டி பகுதியில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

தம்மம்பட்டி பகுதியில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நந்தீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா், அருகம்புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவமூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்தாா். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா், கூடமலை உள்ளிட்ட ஊா்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com