சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்து கொன்ற இளைஞா் கைது

தாரமங்கலம் அருகே நுங்கு வெட்டித் தருவதாகக் கூறி காட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த இளைஞரை தாரமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

ஓமலூா்: தாரமங்கலம் அருகே நுங்கு வெட்டித் தருவதாகக் கூறி காட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த இளைஞரை தாரமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

தாரமங்கலம் ஒன்றியம், தெசவிளக்கு ஊராட்சிக்கு உள்பட்ட மாட்டையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால். விசைத்தறிக் கூலித் தொழிலாளி. கடந்த 1-ஆம் தேதி மாலையில், அங்கே விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை நுங்கு வெட்டித் தருவதாக ஆசை வாா்த்தைக் கூறி, ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வலியால் சிறுமி சத்தமிட்டதால் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன், கல்லால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளாா்.

இந்தக் கொலை குறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே தலைமறைவாக சுற்றித் திரிந்த தனபாலை திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் சிறுமியைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து தனபாலை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com