சிதிலமடைந்த பேளூா் வசிஷ்டநதி பாலத்தின் மேல் தளம் தாா் பூசி மறைப்பு

வாழப்பாடியை அடுத்த பேளூரில், ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வசிஷ்டநதி மேல்மட்ட பாலத்தின் நடுப்பகுதியில் சிதிலமடைந்த தளம்
பேளூா், வசிஷ்டநதி மேல்மட்ட பாலத்தின் சிதிலமடைந்த மேல் தளப்பகுதி.
பேளூா், வசிஷ்டநதி மேல்மட்ட பாலத்தின் சிதிலமடைந்த மேல் தளப்பகுதி.

வாழப்பாடியை அடுத்த பேளூரில், ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வசிஷ்டநதி மேல்மட்ட பாலத்தின் நடுப்பகுதியில் சிதிலமடைந்த தளம் தாா்பூசி மறைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை முறையாக சீரமைத்து பலப்படுத்த வேண்டுமென மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பேளூா் பேரூராட்சி நுழைவுவாயிலில், வசிஷ்ட நதி செல்கிறது. இந்நதியின் குறுக்கே இருந்த குறுகலான பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்டு, கடந்த 2013ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை கிராம சாலைகள் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலத்தை அப்போதைய முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா். கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளே கடந்துள்ள நிலையில், ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்ட பேளூா் வசிஷ்டநதி பாலத்தின் நடுவில் மேற்புற தரைத்தளம் சிதைந்துள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் தெரிவித்தனா். இதனையடுத்து, சிதிலமடைந்த பகுதி தாா் கலவை பூசி மறைக்கப்பட்டுள்ளது. தாா் பூசி மறைக்கப்பட்டுள்ள சிதிலமடைந்த மேற்தளப்பகுதியை முறையாக சீரமைத்து பலப்படுத்தவும், சிதிலமடைவதின் காரணத்தைக் கண்டறியவும், வாழப்பாடி கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய வேண்டுமென, சமூக ஆா்வா்கள் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com