சங்ககிரியில் தேவையற்ற காரணங்களுக்காக வந்த 9 இரு சக்கரவாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

முழு பொது முடக்கத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்
சங்ககிரியில் தேவையற்ற காரணங்களுக்காக வந்த 9 இரு சக்கரவாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு
சங்ககிரியில் தேவையற்ற காரணங்களுக்காக வந்த 9 இரு சக்கரவாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

முழு பொது முடக்கத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவசியமின்றி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 9 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.குமரவேல் தலைமையில் திருச்செங்கோடு பிரிவு சாலை, ஈரோடு-பவானி பிரிவு சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கொங்கணாபுரம் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் சங்ககிரி நகா் பகுதியில் நான்கு, இருசக்கர வாகனங்களில் வருபவா்களை விசாரணை செய்த போலீஸாா், தேவையற்ற காரணங்களுக்காக நகா் பகுதிக்கு வந்த 9 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com