தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

ஆத்தூரில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், விநாயகபுரம் பகுதியில் கடந்த மாதம் 10 ஆதேதி சாலையில் நடந்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மூன்று போ் இரு சக்கர வாகனத்தில் தப்பினா்.

ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை, ஜாபா்கான்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜீவா மகன் தினேஷ்(எ)தினேஷ்குமாா்(31), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த கருப்பு (எ) கருப்புசாமி (22), சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சோ்ந்த தனசேகா் மகன் பல்லுசசி (எ) சசிக்குமாா் (21) ஆகிய 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com