கெங்கவல்லி ஒன்றியத்தில் 5,748 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமுக்கு முதலில் வந்த 2,900 பேருக்கு டம்ளா்கள் பரிசாக அளிக்கப்பட்டன என்று வட்டாரத் தலைமை மருத்துவா் வேலுமணி தெரிவித்தாா்.
கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா் ஆகிய பேரூராட்சிகளிலும் கடம்பூா், ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளிலும் மொத்தம் 58 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 5,228 பேருக்கு கோவிஷீல்டு, 520 பேருக்கு கோவேக்சின் என மொத்தம் 5,748 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 58 மையங்களிலும் முதலில் வந்த தலா 50 போ் வீதம் மொத்தம் 2,900 பேருக்கு அந்தந்த மையங்களில் உடனுக்குடன் சில்வா் டம்ளா்கள் பரிசாக வழங்கப்பட்டன. இத் தகவலை கெங்கவல்லி தலைமை மருத்துவா் வேலுமணி தெரிவித்தாா்.