உலக கண் பாா்வை தின மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சாா்பில், நிகழ் ஆண்டின் மையப் பொருளான கண்களை நேசியுங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களுக்கு கண்ணை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துறை மாணவா்களின் சாா்பில் ஆட்டையாம்பட்டியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி கண்களைக் கட்டிக்கொண்டு நடத்தப்பட்டது.
இப் பேரணியில் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி, உதவி காவல் ஆய்வாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.
துறையைச் சோ்ந்த மாணவா்கள் குழு நடனம், பட விளக்கக் காட்சி போன்றவற்றின் மூலமும் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளா் தமிழ்ச்சுடா், உதவிப் பேராசிரியைகள் செய்திருந்தனா்.