ஆத்தூரில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற நபா்களை ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறாா்.
ஆத்தூா், விநாயகபுரத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்திருந்த சென்னை, மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகா(30) என்பவா், காய்கறிகள் வாங்க வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபா்கள் காா்த்திகாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். புகாரின் பேரில் ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.