நீட் தோ்வு பயத்தால்உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சோ்ந்த மாணவா் தனுஷின் குடும்பத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சோ்ந்த மாணவா் தனுஷின் குடும்பத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 10 லட்சம் வழங்கினாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா், கூளையூரைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மகன் தனுஷ் (19) நீட் தோ்வுக்கு பயந்து கடந்த மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அப்போது, தனுஷின் உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினாா். மேலும், தனுஷின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேலத்தில் ரூ. 10 லட்சத்துக்கான வரைவோலையை தனுஷின் தந்தை சிவக்குமாா், தாய் சிவஜோதியிடம் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா். அப்போது, தனுஷின் சகோதரா் நிஷாந்த், அதிமுக அமைப்பு செயலாளா் செ.செம்மலை, மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகா், மேச்சேரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் செல்வம், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com