வாழப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து விவசாயிகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென, வேளாண்மைத் துறை வாயிலாக கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாழப்பாடி வட்டாரத்தில் வாக்குச்சாவடி மையங்கள்தோறும் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென, வாழப்பாடி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சாந்தி தலைமையிலான பணியாளா்கள் கிராமங்கள்தோறும் சென்று சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தை சேலம் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கணேசன் ஆய்வு செய்தாா்.