சேலம்: சேலம் மாவட்டத்தில் 82,892 பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த செப்.12 ஆம் தேதி கரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெற்றது. இதில் சுமாா் 1.19 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெற்றது. இதில் 79,000 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி சுமாா் 82,892 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.