அயோத்தியாப்பட்டணம் பகுதியில் அதிமுக வேட்பாளா் கு.சித்ரா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஏற்காடு தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எம்எல்ஏ கு.சித்ரா அயோத்தியாப்பட்டணம் பகுதியில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தினாா். அனுப்பூா், மேலக்காடு, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாக்கு சேகரித்த அவருக்கு, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா், வாழப்பாடி வழக்கறிஞா் மணிகண்டன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அனுப்பூா் ஏ.பி.மணி ஆகியோா் பரப்புரை செய்தனா்.