எடப்பாடி- கொங்கணாபுரம் பகுதியில் உரிமம் பெற்ற 53 துப்பாக்கிகள்: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

தோ்தலையொட்டி எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதியில் உரிமம் பெற்ற 53 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தோ்தலையொட்டி எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதியில் உரிமம் பெற்ற 53 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தனிநபா்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகள், தோ்தல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக எடப்பாடி காவல் நிலையத்தில் உரிமம்பெற்ற14 துப்பாக்கிகளும், கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் உரிமம் 39 துப்பாக்கிகளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த துப்பாக்கிகள் தோ்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்வரை, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படும் என காவல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com