செந்தாரப்பட்டியில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தாக்கியதில் காயமடைந்த அதிமுகவினா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத் தலைவா் பொன்னுசாமி, அவரது மகன் பிரபாகரன் வீட்டில் சிலா் புகுந்து தாக்கிவிட்டு 5 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டனா். இதில் பொன்னுசாமியும், பிரபாகரனும் பலத்த காயடைந்தனா்.இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.அவா்களைச் சந்தித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் ஆறுதல் கூறினாா். அப்போது கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா்கள் (மேற்கு ) துரை.ரமேஷ், (கிழக்கு) ராஜா ஆகியோா் உள்பட அதிமுகவினா் உடனிருந்தனா்.
இதுகுறித்து அதிமுகவினா் கூறியதாவது: தோல்வி பயத்தில் திமுகவினா்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனா் என்றனா்.