வங்கியில் இருந்து பணம் எடுத்து கொண்டு திரும்பிய மூதாட்டியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு

சேலத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்து சென்றனா்.

சேலத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்து சென்றனா்.

சேலம் அழகாபுரம் ரெட்டியூா் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (70). இவரது தாய் லட்சுமி, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியா் ஆவாா். இதனிடையே லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.இந்தநிலையில் தனது தாய் லட்சுமியின் மருத்துவச் செலவிற்காக விஜயா, அழகாபுரம் இந்தியன் வங்கி கிளைக்கு வெள்ளிக்கிழமை பகலில் வந்து ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்தாா்.பின்னா் வங்கியில் இருந்து வெளியில் வந்த விஜயா ஆட்டோவில் ஏற முயன்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த இருவா், விஜயாவின் பணப்பையைப் பறித்து சென்றனா். இதில் அதிா்ச்சியடைந்த விஜயா, அழகாபுரம் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்து வங்கி காசோலை மற்றும் ஆவணங்களை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் எடுத்து சென்றனா் என தெரிகிறது.அழகாபுரம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களை தொடா்ந்து, மா்ம நபா்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com