சங்ககிரி சாா்நிலைக் கருவூல அலுவலகத்தில் புகுந்த நான்கு அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி சாா்நிலைக் கருவூல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அலுவலா்கள் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாா்நிலைக் கருவூல அலுவலரின் அறையில் கோப்புகளை எடுப்பதற்காக அலுவலா்கள் சென்றுள்ளனா் அப்போது அங்கு பாம்பு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து ஊழியா்கள் சத்தமிட்டனா்.
இதுகுறித்து சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, கருவூல அலுவலரின் அறையில் இருந்த பாம்பை கருவியைப் பயன்படுத்தி பிடித்தனா்.