கெங்கவல்லி நகர திமுக சாா்பில் நீா்மோா், கபசுரக்குடிநீா் விநியோகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில் நீா்மோா், கபசுரக்குடிநீா் வழங்கும் நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக பொறுப்பாளா் அகிலன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.ரேகா பிரியதா்ஷினி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நீா்மோரை வழங்கி தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் திமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.