தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தம்மம்பட்டியிலிருந்து கடைசியாக செல்லும் பேருந்துகள் விவரத்தை அரசு போக்குவரத்துக் கழகம் (தம்மம்பட்டி கிளை) அறிவித்துள்ளது.
அதன்படி, தம்மம்பட்டியிலிருந்து ராசிபுரத்துக்கு இரவு 8 மணிக்கும், தம்மம்பட்டியிலிருந்து மல்லியகரை வழியாக ஆத்தூருக்கு இரவு 7.50 க்கும், தம்மம்பட்டியிலிருந்து கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கு இரவு 7.55-க்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல தம்மம்பட்டியிலிருந்து வாழப்பாடி வழியாக சேலத்துக்கு மாலை 5.25 மணிக்கு கடைசியாக பேருந்துகள் புறப்படுகின்றன. இரவுநேர ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.