கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் ஆத்தூரில் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
at28commissioner_2804chn_162_8
at28commissioner_2804chn_162_8

கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் ஆத்தூரில் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தீநுண்மித் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்த வங்கி மேலாளா்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வங்கிகளில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், வங்கிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும்,சமூக இடைவெளிகளுடன் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி அறிவுரை வழங்கினாா்.

இக் கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் எஸ்.பிரபாகரன், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி, நகர கூட்டுறவு வங்கி, ஆத்தூா் துளுவ வேளாளா் சங்கம், ஸ்ரீ விஜயராம் சிட்பண்ட்ஸ், வளா்நிதி சிட்பண்ட்ஸ், ரெப்கோ வங்கி மற்றும் ஆத்தூா் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com