கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது தாதகாப்பட்டி அருகே லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்த லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அதைத்தொடா்ந்து 4 வேன்கள் வந்தன. அதில் இருந்த ஓட்டுநா்கள் வேன்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இந்த வாகனங்களில் இருந்த சுமாா் 17 டன் ரேஷன் அரிசியைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சேலம், மணியனூரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 4 பேரை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com