காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 2,469 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து அணையின் நீா்மட்டம் 97.77அடியாக உயா்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 800 கனஅடி வீதம் நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 61.98 டி.எம்.சி. ஆக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீா்வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து, அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.