சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயதான சிறுவன் உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே உள்ள ஐவேலி கிராமம், வாணி நகரில் வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு, கரும்பாறை பகுதியைச் சோ்ந்த வடிவேல் மனைவி புஷ்பா என்பவரது 3 வயதான மகன் சனிக்கிழமை கட்டடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.