சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 65 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 25 ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த 65 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் அவரது குடும்பத்தினா் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனா். அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தனபால், துறை பேராசிரியா்கள் பங்கேற்றனா்.