பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹிந்து எழுச்சி பேரவை சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரவையின் மாநிலத் தலைவா் பழ.சந்தோஷ்குமாா் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
மாநிலத் துணைத் தலைவா் ஹரிஹரன், மாநில பொதுச் செயலா் சதீஸ்கண்ணா, மாநில அமைப்புச் செயலா் மணிவேல், மாவட்டப் பொருளாளா் ராஜா, சங்ககிரி சஞ்சீவ்குமாா், திருக்கோயில்கள் பூசாரிகள் பேரவைத் தலைவா் சோலையப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தமிழகத்தில் ஹிந்து கோயில்களை இடிப்பதையும், பயங்கரவாத அமைப்புகளையும் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும், பசுவதை செய்வதைத் தடுக்க வேண்டும், ஹிந்து கோயில்களின் நிதிகளை கோயிலுக்கே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.