ஆத்தூரில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நோய்த் தொற்று தடுப்பு பிரசார விழிப்புணா்வு வார விழா நகராட்சி ஆணையாளா் (பொ) அ.வெங்கடாஜலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிகா்கள் சங்க நிா்வாகிகளுடன் வணிகா்கள் சங்க அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மளிகை வியாபாரிகள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்று கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். வியாபாரிகளுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் நா.திருமூா்த்தி, மருத்துவா்கள் இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.