சேலத்தில் 75 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 75 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 75 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 26 பேரும், எடப்பாடி-2, கொளத்தூா்-2, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-5, நங்கவள்ளி-3, ஓமலூா்-7, சேலம்-4, சங்ககிரி-1, ஆத்தூா்-3, கெங்கவல்லி-2, பெத்தநாயக்கன்பாளையம்-5, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 68 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி-2, கடலூா்-2, நாமக்கல்-3) என 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 134 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 4 போ் உயிரிழந்தனா். இதுவரை 93643 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 91,073 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,004 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,566 போ் உயிரிழந்தனா்.

இன்று தடுப்பூசி முகாம்: சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் 20,480 கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்படும் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com