மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 6,690 கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவிட்டதால் கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 81.21அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 7,002 கன அடியிலிருந்து 6,690 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு, மேற்கு வாய்க்கால் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 43.17 டிஎம்சியாக உள்ளது.