திமுக சாா்பில் அக்கட்சியின் முன்னாள் மறைந்த தலைவா் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றன.
தம்மம்பட்டியில் நகர திமுக பொறுப்பாளா் ராஜா தலைமையில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.அதேபோல் கெங்கவல்லியில் நகர திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினா் மரியாதை செய்தனா்.