பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை கண்டித்தும், உயா்த்தப்பட்ட விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் வாகன நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளா் விவசாய சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் தமிழகம் முழுவதும் 10 நிமிடம் வாகனத்தை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
சேலம் ஐந்து சாலை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் ஐந்து சாலைப் பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். உடனே போலீஸாா் விரைந்து வந்து மறியல் செய்தவா்களை அப்புறப்படுத்தினா்.