காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி பாசனப் பகுதியை சார்ந்த கரும்பு விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி பாசனப் பகுதியை சார்ந்த கரும்பு விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு நிகழ்வொன்றில் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்நிலையில் அண்மையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகையில் வழங்கப்பட உள்ள கரும்பு ஒன்று அதிகபட்சமாக ரூ.33 வரை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறையினர் நேரடியாக கொள்முதல் செய்திட வாய்ப்பு உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்திருந்தது செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பினை வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல், கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்வார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் இதுவரை கரும்பு கொள்முதல் செய்யாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெள்ளியன்று காலை பூலாம்பட்டி பேருந்து நிலையம் முன், திரண்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தும், கையில் கரும்புகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள தங்களது செங்கரும்பு களை அரசு உடனடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும் எனவும், கூற்றுவர் துறையினர் கொள்முதல் செய்யாத நிலையில்  அதனை எதிர்பார்த்துக் காத்திருந்த தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனை தவிர்க்கும் விதமாக இப்பகுதியில் உள்ள அனைத்து கரும்பு தோட்டங்களில் உள்ள கரும்பினை கூட்டுறவுத் துறை யினர்  உடனடியாக மொத்த கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com