கெங்கவல்லியில் புதிய வட்டாரக்கல்வி அலுவலா்கள் இருவா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.
கெங்கவல்லியில் புதிய வட்டாரக்கல்வி அலுவலா்கள் இருவா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா். கெங்கவல்லி ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலா்-1 ஆக இருந்த வாசுகி, தாரமங்கலத்திற்கும், வட்டாரக்கல்வி அலுவலா்-2 ஆக இருந்த அந்தோணிமுத்து, பெத்தநாய்க்கன்பாளையத்திற்கும் மாறுதலாகிச்சென்றனா். இதையடுத்து, இங்கு புதிய வட்டாரக்கல்வி அலுவலா்களாக அயோத்தியாப்பட்டணத்திலிருந்து மாறுதலாகி வந்த சீனிவாஸ் மற்றும் திருப்பூா் மாவட்டம் காங்கேயத்திலிருந்து மாறுதலாகி வந்த மகேந்திரன் ஆகிய இருவரும் கெங்கவல்லியிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். இருவருக்கும் ஒன்றியத் தலைமையாசிரியா்கள், உதவி ஆசிரியா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com