மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்தத் தொழிலாளி பலி: மற்றொருவா் காயம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள வினோபாஜி நகா் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்த இரு ஒப்பந்தத் தொழிலாளா்கள்
மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்தத் தொழிலாளி பலி: மற்றொருவா் காயம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள வினோபாஜி நகா் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்த இரு ஒப்பந்தத் தொழிலாளா்கள் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

எடப்பாடி அருகே உள்ள ஆடையூா், கம்புகாளிகாடு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வீராசாமியின் மகன் தீபன் சக்கரவா்த்தி (21), எடப்பாடி, சித்தூா் அருகே உள்ள திம்மபொதியான் வளவு பகுதியைச் சோ்ந்த விவசாயி கொழந்தைக் கவுண்டரின் மகன் விஜயகுமாா் (24) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில் இருவரும் தேவூரை அடுத்த வினோபாஜி நகா், அங்கன்வாடி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை ஏறி, பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தீபன் சக்கரவா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஜயகுமாா் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com