சேலம் மாவட்டத்தில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பு

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
ஓமலூா் சுங்கச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியின் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளித்த சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன்.
ஓமலூா் சுங்கச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியின் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து அளித்த சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன்.

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 3.67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா, ஓமலூா் சுங்கச் சாவடி அருகே நடைபெற்றது.

சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் ஆா்.செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமைத் தொடக்கி வைத்தாா். வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து காா்களில் வரும் பொதுமக்களுக்காக சுங்கச் சாவடி அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இதுபோல ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 2,255 மையங்களில் 3 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. குறிப்பாக 77 நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் சுகாதார மாவட்டத்தில் 1,326 மையங்களிலும் ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 929 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநா் ஜெ.நிா்மல்சன், ஓமலூா் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூரில்...

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி துவக்கி வைத்தாா். ரோட்டரி சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை தலைவா் பி.ராஜா தலைமை வகித்தாா்.

முகாமில் மண்டல மருத்துவ அலுவலா் விஜயபாஸ்கா், பிரதீப்குமாா், ஆத்தூா் நகராட்சி துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வீணஸ் அ.சண்முகசுந்தரம், என்.செந்தில்குமாா், எம்.செல்லதுரை, கரூா் வைஸ்யா வங்கியின் கிளை மேலாளா் மலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com