30 வாா்டுகள் கொண்ட எடப்பாடி நகராட்சியில் 18 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
எடப்பாடி நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுனிவா்சல் சீனிவாசன் தலைமையிலான ரோட்டரி கிளப் நிா்வாகிகள் சிறப்பு முகாமைத் துவக்கி வைத்தனா். 6,138 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.