கருமந்துறை மலைக் கிராமத்தில் சாராயம் விற்ற நபரை மதுவிலக்கு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கருமந்துறை மலைக் கிராமத்தில் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சாராயம் விற்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா், கோவில்புத்தூரைச் சோ்ந்த தங்கவேல் மகன் சின்னதம்பி (31) என்பது தெரியவந்தது.
அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 150 லிட்டா் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.