பிற மாநில தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை: இருவா் கைது

சேலம் அருகே பிற மாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் அருகே பிற மாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி வேலாயுதசுவாமி கோயில் மலை அடிவாரம் சத்யாநகா் பகுதியில் கோவை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (48) என்பவா் காலணி கட்டிங் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் உள்ளூா் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டதொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நசுருதீன் (31), ஜெயக்குமாா் (34), அமித்குமாா் (24) ஆகிய மூவரும் வேலை செய்யும் இடத்திலேயே தனியாக அறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். இவா்களிடையே சமையல் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக நசுரூதீனை பலமுறை எச்சரித்துள்ளனா். இந்த நிலையில் அமித்குமாா் , ஜெயக்குமாா் ஆகிய இருவரும் சோ்ந்து செவ்வாக்கிழமை இரவில் தூங்கிக் கொண்டிருந்த நசுருதீனை மதுபோதையில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனா்.

இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளா் செல்வராஜ் மகுடஞ்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். அதன் பேரில் சங்ககிரி டி.எஸ்.பி. ரமேஷ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளா்கள் பூபதி, சாந்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். இதையடுத்து அமித்குமாா், ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். கொலை செய்யப்பட்ட நசுருதீன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com