சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 12.90 லட்சத்தில் புற்று நோயாளிகளுக்கான காத்திருப்பு அறையை ஆட்சியா் சி.அ.ராமன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 12.90 லட்சத்தில் புதிதாக இக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பி.வி.தனபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.